Tuesday, February 24, 2026

ஏடிஎம்-ல் பணம் எடுப்பதுபோல் இனி ரேஷன் பொருட்களையும் பெறலாம்

ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் நடைபெறும் முறைகேடுகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், சில இடங்களில் அவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதைத் தடுக்கும் நோக்கில், Government of India டிஜிட்டல் முறையில் உணவுப் பொருட்கள் விநியோகத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக, இந்த திட்டம் குஜராத் மாநிலத்தின் சில மாவட்ட ரேஷன் கடைகளில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் படி, ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு வழங்கும் உணவுப் பொருட்களுக்கான டிஜிட்டல் கூப்பன், அவர்களின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். பயனாளிகள் ரேஷன் கடைக்கு சென்று, தங்களது மொபைலில் கிடைத்த கூப்பனை காட்டி பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், 24 மணி நேரமும் ரேஷன் பொருட்களை பெறும் வசதியாக, ஏடிஎம் இயந்திரம் போன்ற வடிவில் ‘அன்னபூர்ணா’ என்ற இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ரேஷன் பொருட்கள் முன்கூட்டியே பாக்கெட்டுகளாக வைக்கப்பட்டிருக்கும்.

பயனாளிகள் கண் கருவிழி பதிவு அல்லது விரல் ரேகை பதிவு மூலம் அடையாளத்தை உறுதிப்படுத்தி பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். கூடுதலாக, இயந்திரத்தில் உள்ள QR கோடு வசதியையும் பயன்படுத்தி பொருட்களை வாங்க முடியும்.

இந்த இயந்திரம் 35 விநாடிகளில் 25 கிலோ வரை உணவுப் பொருட்களை வழங்கும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த டிஜிட்டல் விநியோக முறை விரைவில் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

Related News

Latest News