வெடிக்கும் 3ஆம் உலக போர்? டிரம்ப் கொடுத்த பயங்கர வார்னிங்.!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ரஷ்யா–உக்ரைன் போர் தொடர்ந்து நீடித்தால் இது உலகப்போராக மாறக்கூடும் என்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ANI செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, மாநில அளவிலான ஏஐ நடைமுறைகளைத் தடைசெய்யும் முக்கிய உத்தரவில் கையெழுத்திட்ட பிறகு ஊடகங்களைச் சந்தித்த அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

ரஷ்யா–உக்ரைன் மோதல் 2014-ஆம் ஆண்டு டிக்னிட்டி புரட்சிக்குப் பிறகு தொடங்கியது. அதன் பின்னர் ரஷ்யா கிரிமியாவை இணைத்துக் கொண்டது. டோன்பாஸ் பகுதியில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் எழுந்து, உக்ரைன் ராணுவத்துடன் மோதல்கள் ஆரம்பமானது. கொரோனா காலத்தில் தாக்குதல்கள் குறைந்திருந்தாலும், 2022 பிப்ரவரி 24 அன்று ரஷ்யா முழுமையான படையெடுப்பைத் தொடங்கியது. தற்போது உக்ரைன் நிலப்பரப்பின் சுமார் 20% ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ளது.

செய்தியாளர் சந்திப்பில், கடந்த மாதம் மட்டும் 25,000 பேர் உயிரிழந்துள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டார். பெரும்பாலானோர் ராணுவ வீரர்களாக இருப்பது போரின் கொடூரத்தைக் காட்டுகிறது என்றும், இத்தகைய சூழல் உலகப்போருக்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

அமெரிக்கா சமரச முயற்சிகளில் ஈடுபட்டு வந்தாலும், இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் மெதுவாக இருப்பதால் டிரம்ப் விரக்தி அடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. வெள்ளை மாளிகை செய்தி பிரிவு செயலர் Karoline Leavitt கூறுகையில், அதிபர் இரு தரப்பின்மீதும் அதிருப்தியடைந்துள்ளதாகவும், போரை விரைவில் முடிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அமெரிக்கா-உக்ரைன் இடையிலான முக்கிய தாதுக்கள் ஒப்பந்தம் காரணமாகவும், எதிர்கால உலோக சுரங்க வருவாயில் 50% தொகையை வழங்கும் உடன்பாட்டினாலும், அமெரிக்கா உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வருகிறது.

டிரம்ப் அளித்த எச்சரிக்கை தற்போது உலகளவில் பெரிய விவாதமாக மாறியுள்ள சூழலில், ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் அடுத்து எவ்வாறு செயல்படுவார் என்பது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

Related News

Latest News