Thursday, July 31, 2025

மகளிர் உரிமை தொகை : மேலும் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி, தற்போது சுமார் 1 கோடி 14 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது.

இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக மேலும் 3 தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து ,அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, காலமுறை ஊதியம் பெற்று, தற்போது ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களில் பெண்கள் விண்ணப்பிக்கலாம். அரசுத்துறைகளில் மானியம் பெற்று 4 சக்கர வாகனம் வைத்திருப்போர் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் தகுதியானவர்கள்.

விதவை ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களில் ஓய்வூதியதாரர் அல்லாத பெண்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News