Wednesday, July 30, 2025

ரயில் தண்டவாளத்தில் தாறுமாறாக கார் ஓட்டிய பெண்ணிடம் விசாரணை

தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம், ஷங்கர்பள்ளி ரயில்வே கேட் அருகே ஒரு பெண் ரயில் தண்டவாளத்தில் தாறுமாறாக கார் ஓட்டியுள்ளார். இதையடுத்து ரயில்வே ஊழியர்கள், பொது மக்களுடன் இணைந்து காரை நிறுத்தி அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் இருந்து வெளியே அழைத்து வந்தனர்.

இதன் காரணமாக அவ்வழியே வந்து கொண்டிருந்த பெங்களூரில் இருந்து ஐதராபாத் நோக்கி வந்துகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

விசாரணையில் அந்த பெண் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண் குடிபோதையில் இருந்தாரா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News