கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி நேற்று முன்தினம் காலமானார். இதையடுத்து வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுமா என கேள்வி எழுந்தது.
இந்நிலையில் இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில், தமிழக சட்டமன்ற பதவிக்காலம் மே 9-ம் தேதி முடிவடையும் நிலையில் வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.