Sunday, June 29, 2025

ஒன்று கூடிய “பாகிஸ்தான், சீனா, வங்கதேசம்” ! இந்தியா எடுத்த அதிரடி முடிவு!

இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான உறவுகள் இப்போது மிக மோசமான நிலையை எட்டியுள்ளன. வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் சேர்ந்து நம் நாட்டுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்தியா பதிலடி நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட பெரும் கலவரத்தின் பின்னர், அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து இந்தியாவுக்கு தஞ்சம் புகுந்தார். அதையடுத்து முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக பதவியேற்றார். ஆனால், இவர் நம் நாட்டுக்கு எதிரான கருத்துகளோடு செயல்பட்டு, பாகிஸ்தான், சீனா, துருக்கி போன்ற நாடுகளுடன் இணைந்து எல்லையில் பதற்றத்தை உருவாக்கி வருகிறார்.

இதற்குப் பதிலாக இந்தியா வங்கதேச பொருளாதாரத்தை அழுத்தும் நோக்கில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முக்கியமாக, எல்லை வழியாக சணல், துணிகள் உள்ளிட்ட பொருட்களை இந்தியா ஏற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டின் முக்கியமான வருமான மூலமான ஜவுளித் துறையை கடுமையாக பாதிக்கக்கூடியது.

இந்த புதிய உத்தரவின் படி, வங்கதேச பொருட்கள் இனி நவா ஷேவா துறைமுகம் வழியாக மட்டுமே இந்தியாவுக்குள் அனுமதிக்கப்படும். நேபாளம், பூடான் வழியாக திரும்ப வங்கதேச பொருட்களை இந்தியாவுக்குள் கொண்டு வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வங்கதேச வர்த்தகர்கள் அதிக செலவில் பொருட்களை அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான எதிரொலியாக, வங்கதேசத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதுடன், இந்திய ஜவுளித் துறைக்கு இது ஒரு நன்மையாக அமையும்.

இதுமட்டுமல்லாமல், ஏற்கனவே மே 17 மற்றும் ஏப்ரல் 9ம் தேதிகளிலும், இந்தியா சில முக்கிய பொருட்களுக்கு தடை விதித்து, வங்கதேசத்திற்கு எதிரான வர்த்தக நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்த சூழ்நிலையில், இந்தியா தனது வர்த்தக பலத்தை பயன்படுத்தி வங்கதேசத்தின் நடத்தைக்கு கடும் பதிலடி கொடுத்து வருவதை இந்த நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news