இஸ்ரேலும் ஈரானும் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்குப் பிறகும், ஒரு முக்கியமான கேள்வி மக்கள் மனதில் பதிந்துவிட்டது – ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி எங்கே? ஒரு வாரத்துக்கும் மேலாக அவர் பொதுமக்கள் முன்னிலையில் தோன்றவில்லை. இது, போரின் மையமாக இருக்கும் நாட்டில் ஒரு பெரிய கலக்கத்தை உருவாக்கியுள்ளது.
இஸ்ரேலின் துல்லியமான ஏவுகணை தாக்குதல்களில் கமேனியின் நெருங்கிய ஆலோசகர்கள் பலர் கொல்லப்பட்டதையடுத்து, அவர் ஒரு ரகசிய பதுங்கு குழியில் ஒளிந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இதுவரை, அவரின் இருப்பிடம், உடல்நிலை, நிலைமை குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. இதே நேரத்தில், தெஹ்ரானில் உள்ள அரசியல் வட்டாரங்களில் குழப்பம் அதிகரித்து வருகிறது. குழு மோதல்கள் தீவிரமடைந்துள்ளன என்றும், தலைமைப் பதவிக்காக புதிய போட்டிகள் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இஸ்ரேலின் தாக்குதலால் தேசிய பாதுகாப்பு முற்றிலும் நிலைதடுமாறியுள்ளது. மக்கள் மட்டுமல்ல, முக்கிய அரசியல் தலைவர்களும் கமேனியின் மௌனத்தால் குழம்பியுள்ளனர். அவர் இறந்திருக்கக்கூடும் என்ற பயமும் சிலருக்குள் உருவாகியுள்ளது. கமேனியின் இல்லாமை அவரது ஆதரவாளர்களிடையே உணர்ச்சிப் பெருக்கத்தையும், பதட்டத்தையும் உருவாக்கியுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கமேனியின் பங்கு இருந்ததா இல்லையா என்ற சந்தேகம் கூட எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், கத்தார் எமிர் ஆகியோர் இடையில் நடந்த ஒப்பந்தத்தில், ஈரான் உச்ச அதிகாரி ஆலோசிக்கப்பட்டாரா என்ற கேள்விக்கு, அதிகாரிகள் இன்னும் தெளிவான பதில் தரவில்லை. சிலர், அவர் தொலைதூரம் இருந்து முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார் என்று கூறுகிறார்கள், ஆனால் அதற்கு ஆதாரமெதுவும் இல்லை.
இந்த நிலையில், ஈரானில் அதிகாரப் போட்டி தொடங்கியுள்ளது. ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியான் தலைமையிலான moderate பிரிவு, நாட்டை நிதானமாக நிர்வகிக்க வேண்டும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை தேவை என வலியுறுத்துகிறது. மறுபுறம், சயீத் ஜலிலியின் பிரிவு, எந்த வகையான தொடர்பும் வேண்டாம் என்கிறார்கள். வெளிநாட்டு அமைச்சரும், ஜனாதிபதியுமான அரக்சியையும் அவர்கள் எதிர்த்துவிட்டனர்.
இதற்கிடையில், ஒரு ரகசிய குழு கமேனியை ஒதுக்கி, அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கிறதா? என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது. நாட்டை இஸ்ரேலின் தாக்குதல்களில் இருந்து காப்பதற்காக, அமெரிக்காவுடன் பேசும் ஒரு தலைமைக் குழுவை உருவாக்கும் சதி நடக்கிறது என்றும் தகவல்கள். முன்னாள் ஜனாதிபதி ஹசன் ரூஹானி இந்தத் திட்டத்துக்கு தலைவராக பரிசீலிக்கப்படுகிறார் என்றுவும் பேசப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெறும் “ஆஷூரா” நிகழ்வில் கமேனி தோன்றவில்லை என்றால், அது ஒரு பெரிய குறியீடாகப் பார்க்கப்படும் என நடுநிலையிலான அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். கமேனியின் மௌனம் தொடருமா? அல்லது அவர் மீண்டும் எப்போது தோன்றப்போகிறார் என்பதுதான் தற்போது மத்திய கிழக்கின் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.