Wednesday, June 4, 2025

‘இதுக்குமேல’ என்ன வேணும்? ‘நச்சுன்னு’ கேட்ட ஆஸி Ex கேப்டன்

அனைத்து தகுதிகளும் இருந்தும் இந்திய பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் அய்யர், தொடர்ந்து BCCIயால் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். முதலில் காண்ட்ராக்ட்டில் இருந்து BCCI அவரை நீக்கியது. ஷ்ரேயாஸ் தன்னுடைய திறமையை நிரூபித்துக் கொண்டே இருந்ததால், வேறு வழியின்றி அண்மையில் தான் மீண்டும் அவருக்கு காண்ட்ராக்ட் வழங்கியது.

என்றாலும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என்று பல்வேறு தரப்பிலும் இருந்தும் BCCIக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இதற்கு தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ” நான் தேர்வுக்குழுவில் இல்லை” என்று, அஜித் அகர்கரை கைகாட்டி தப்பித்துக் கொண்டார்.

தற்போது IPL தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை, ஷ்ரேயாஸ் இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். ஒருபக்கம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் கூட 87 ரன்கள் அடித்து, அணியின் வெற்றியை ஷ்ரேயாஸ் உறுதி செய்தார். இதனால் நாலாபுறமிருந்தும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இந்தநிலையில் மும்பை – பஞ்சாப் போட்டியை நேரலையில் வர்ணனை செய்த, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் Michael Clarke, ” இந்திய தேர்வாளர்களே கவனியுங்கள். மிகுந்த அழுத்தத்துக்கு இடையிலும் ஷ்ரேயாஸ் சிறப்பாக செயல்பட்டுள்ளார்,” என்று தன்னுடைய பங்குக்கு, BCCIக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள், ” வருங்கால இந்திய கேப்டன் ஆவதற்கு எல்லா தகுதிகளும் ஷ்ரேயாஸ்க்கு உள்ளன’ என்று தங்களுடைய பங்குக்கு BCCIயை வறுத்தெடுத்து வருகின்றனர்.மொத்தத்தில் ஷ்ரேயாஸ் பாகுபலி போல, கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் உயர்ந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news