Thursday, June 26, 2025

சும்மாவா! ‘வாங்குன’ அடி அப்படி இளம்வீரரை ‘திருப்பி’ அனுப்பிய கம்பீர்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால், அணிக்குள் சிலபல மாற்றங்கள் சத்தமில்லாமல் நடந்து வருகின்றன. இந்த தோல்விக்குமுக்கிய  காரணமாக தலைமை பயிற்சியாளரும், கேப்டன் சுப்மன் கில்லும் பார்க்கப்படுகின்றனர்.

இருவரும் தங்களுக்கு பிடித்த வீரர்களுக்கு வாய்ப்பளித்ததே, தோல்விக்கு காரணம் என்று பலவாறாக  குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் 2வது டெஸ்டில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக குல்தீப் யாதவ், முஹமது சிராஜ்க்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் இடம்பெறலாம் என தெரிகிறது.

இந்திய அணியின் துருப்புச்சீட்டாக பார்க்கப்படும் பும்ரா, 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவேன் என கூறியிருக்கிறார். இதனால் அடுத்த டெஸ்ட் போட்டியில் அவர் இடம்பெறுவது சந்தேகம் தான். எனவே அர்ஷ்தீப் சிங்கிற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம்.

இந்தநிலையில் ரிசர்வ் வீரராக ஹர்ஷித் ராணாவை தேர்வு செய்திருந்த கவுதம் கம்பீர், தற்போது அவரை பார்சல் செய்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி விட்டததாகத், தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பயிற்சி ஆட்டத்தில் நன்றாக பெர்பார்ம் செய்த அன்ஷூல் கம்போஜ், கலீல் அஹமது ஆகியோருக்கு பதிலாக ஹர்ஷித் ராணாவை கம்பீர் மாற்று வீரராக தேர்வு செய்திருந்தார்.

அப்பொழுதே இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. தற்போது முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வியை தழுவி இருப்பதால் BCCI கம்பீர், கில் இருவரிடமும் விளக்கம் கேட்டுள்ளது. எனவே ஹர்ஷித் ராணா மாற்று வீரராக வந்து சொதப்பினால் அதற்கும் சேர்த்து விளக்கம் அளிக்க வேண்டி இருக்கும்.

எதற்கு வம்பு? என்று நினைத்த கம்பீர், தற்போது ஹர்ஷித்தை அணியில் இருந்து நீக்கி விட்டாராம். இதனால் அன்ஷூல் அல்லது கலீல் இருவரில் ஒருவர், ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் ஒரேயொரு போட்டியை மட்டுமே இந்திய அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news