Thursday, June 19, 2025

போர் வெடிக்க போகுது! ஈரானின் கடைசி எச்சரிக்கை – WhatsApp-ஐ அழிங்க! இஸ்ரேலுக்கு மாபெரும் அதிர்ச்சி!

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் சூழ்நிலை தீவிரமாகி வருகிறது. ஏற்கனவே ஆறு நாட்களாக இருவரும் மாறி மாறி ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இரு நாடுகளிலும் சில முக்கியமான நகரங்கள், ராணுவ தளங்கள் சேதமடைந்துள்ளன.

இந்த சூழ்நிலையில்தான், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, “இனி எவருக்கும் இரக்கம் காட்டக் கூடாது… தானாகவே நடைபெறும் போருக்கு தயாராக இருங்கள்… நாட்டின் முழு சக்தியுடன் நாம் செயல்பட வேண்டும்” என அறிவித்துள்ளார்.

அந்த உரையால், இஸ்ரேலின் பதற்றம் மேலும் அதிகரித்தது. இதையடுத்து, ஈரான் அரசு திடீரென மக்களுக்கு ஒரு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டது – “WhatsApp செயலியை உடனடியாக அகற்றுங்கள்… பயன்படுத்தவே கூடாது” எனக் கூறியது.

இது குறித்து ஈரான் அரசின் ஊடகங்கள் கூறுவதாவது, WhatsApp செயலியின் மூலம் மக்கள் பகிரும் தகவல்களை இஸ்ரேலின் உளவுத்துறைக்கு அனுப்பும் வகையில் அந்த நிறுவனம் செயல்படுகிறது. மக்களின் செயல்கள், உரையாடல்கள் போன்ற விஷயங்கள் சேகரிக்கப்படுகின்றன, எனவே இது நாட்டுக்கே ஆபத்தாக மாறும் என அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், இது தொடர்பான உறுதியான ஆதாரங்களை அரசு வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து, WhatsApp நிறுவனம் இதை முற்றிலும் மறுத்து, “நாங்கள் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கிறோம். end-to-end encryption என்ற தொழில்நுட்பம் மூலம் அனுப்புபவரும் பெறுபவரும் தவிர வேறு யாராலும் அந்த தகவலைக் காண முடியாது. எந்த அரசுக்கும் தகவல்கள் வழங்குவதில்லை” எனக் கூறியுள்ளது.

இந்த நேரத்தில், WhatsApp போன்ற செயலிகள் மக்கள் பயன்பாட்டுக்கு மிகவும் முக்கியமானவை. ஆனாலும், போர் சூழ்நிலையில் தகவல் கூட ஒரு வகை ஆயுதமாக இருக்கலாம் என்பதால், ஈரான் இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

உண்மையில் இஸ்ரேல் உளவுத்துறைக்கு WhatsApp தரவுகளை வழங்குகிறதா? அல்லது இது ஒரு பாதுகாப்பு விழிப்புணர்வா? இதற்கான பதில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news