Friday, June 13, 2025

விருதுநகர் பட்டாசு வெடி விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், வடகரை கிராமத்தில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் இன்று காலை விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நிதி உதவி அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ. 1 லட்சமும் இலேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news