ஜெர்மனியில் புயல் காரணமாக விமானம் நடுவானில் குலுங்கியதால், அவசர, அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இருந்து ரியானேர் என்ற விமானம் இத்தாலியின் மிலன் நகரை நோக்கி புறப்பட்டது. விமானத்தில் 6 பணியாளர்கள் உள்பட 185 பேர் இருந்த நிலையில், நடுவானில் சென்றபோது பலத்த புயல் காற்று வீசியது. இதனையடுத்து விமானம் பயங்கரமாக குலுங்கியதால் பயணிகள் அச்சம் அடைந்தனர். பின்னர் பவேரியாவின் மெம்மிங்கன் அருகே, பத்திரமாக விமானம் தரையிறக்கப்பட்டதால் 185 பேரும் உயிர்தப்பினர்.