Tuesday, June 3, 2025

15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் இல்லை – போராட்டத்தில் இறங்கிய மக்கள்

திருக்கோவிலூர் அருகே, முறையாக குடிநீர் கிடைக்காததால் கிராம மக்கள் காலிகுடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த வடமருதூர் கிராமத்தில், ஆதிதிராவிடர் மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு கடந்த 15 நாட்களுக்கு மேலாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், திருக்கோவிலூர்-கடலூர் சாலையில் காலிகுடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஊராட்சி தலைவர் மலர்கொடி கிருஷ்ணமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news