தமிழ் உச்சநட்சத்திரம் நடிகர் விஜய்.. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான தி கோட்.. இந்த திரைப்படம் வசூலில் பட்டை கிளப்பியது.. நடிகர் விஜய் தற்போது அரசியலில் களம் இறங்கியுள்ள காரணத்தினால், சினிமாவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் ஜனநாயகன் திரைப்படம் தான் தனது கடைசி திரைப்படம் என்றும் அறிவித்துவிட்டார்.
இதன் பிறகு முழுக்க முழுக்க அரசியல் மட்டுமே என விஜய் எடுத்த முடிவு அவருடைய ரசிகர்களுக்கு வருத்தமளிக்கிறது என்கின்றனர்.ஆனால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் விஜயை தொடர்ந்து நடக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்..தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், இன்னும் patch work மட்டுமே மீதமுள்ளது என கூறப்படுகிறது.இந்த நிலையில், இந்த திரைப்படம் குறித்து விஜய் எடுத்துள்ள அதிரடி முடிவு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ஒவ்வொரு வருடமும் விஜய்யின் பிறந்தநாளின் போது அவருடைய திடைப்படத்தின் ஏதேனும் அப்டேட் வெளியாகும்.. அதேபோல் இந்த வருடமும் வரும் என்று நினைத்த ரசிகர்களுக்கு விஜய் அதிர்ச்சியை கொடுத்துள்ளார்
அதாவது, வருகிற ஜூன் 22ம் தேதி தனது பிறந்தநாள் அன்று தனது திரைப்படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளிவர கூடாது என விஜய் முடிவு செய்துள்ளாராம். மேலும் படப்பிடிப்பின் இறுதி நாளில் எடுத்த புகைப்படங்கள் கூட இப்போது வெளிவரக்கூடாது என கூறிவிட்டாராம்.திரைப்படத்தின் ரிலீஸுக்கு ஒரு மாதத்திற்கு முன் அப்டேட் ஒவ்வொன்றாக வெளிவந்தால் போதும் என அவர் முடிவு செய்துள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர் கூறியுள்ளார்.
இதற்கு காரணம், தனது ரசிகர்களும் தொண்டர்களும் அரசியலில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவும், அவர்களின் கவனம் திசைமாறக்கூடாது என்பதற்காகவும் தான் இந்த முடிவை விஜய் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்