கேப்டன் என்றாலே முதலில் நமக்கு ஞாபகம் வருவது விஜயகாந்த் தான்.. இவர் சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜவாழ்வில் இவர் ஒரு ஹீரோதான்.. இவருக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகன் அரசியலிலும், இளைய மகன் சினிமாவிலும் களமிறங்கியுள்ளனர்.
இளைய மகன் சண்முகபாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள படைத்தலைவன் திரைப்படம் கடந்த 13ம் தேதி திரைக்கு வந்தது. மக்கள் மத்தியில் இந்த திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்த திரைப்படத்தின் press show முடிந்த பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்து ஹீரோ சண்முகபாண்டியன் திரைப்படம் குறித்து பல விஷயங்களை பேசினார்.
அதன்பின் தனது அண்ணன் விஜய பிரபாகரன் திருமணம் குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார்.
விஜய பிரபாகரன் திருமணம் குறித்து பேசிய சண்முகபாண்டியன் “எனக்கு அண்ணி விரைவில் வருவார். எனது அண்ணனுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அதற்கு நேரம் விரைவில் வரும்” என கூறியுள்ளார்.
விஜய பிரபாகரனுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் திருமணம் நடக்கவில்லை. விஜயகாந்த்தின் உடல்நிலை தொடர்ந்து மோசமானதால்தான் அவரது திருமணம் நடக்கவில்லை என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.