Saturday, May 31, 2025

ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் நிரப்ப சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு

கர்நாடக மாநிலம் பீதர் நகரில் உள்ள ஒரு ஏ.டி.எம். இயந்திரத்தில் நிரப்ப பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

ஏ.டி.எம்.களில் பணம் போட சென்றபோது பைக்கில் வந்த மர்மநபர்கள் 5 முறை துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் கிரி வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த சிவக்குமார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news