பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வந்த புகாரின் பெயரில் சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
டி.ஜி.பி. சங்கர் ஜிவாலிடம் பெண் காவலர் அளித்த புகார் குறித்து, டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் விசாக கமிட்டி விசாரணையின் அடிப்படையில் மகேஷ் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.