சென்னை மாநகராட்சியில் கடந்த 2023- ஆம் ஆண்டு முதல் இணையதளம் மூலம் செல்லப் பிராணிகள் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.
முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெற்றும், தடுப்பூசி செலுத்தியும், ’மைக்ரோ சிப்’ பொருத்தியும் வருகின்றனர்.
செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற இன்று (டிசம்பர் 14) கடைசி நாள் என்பதால் காலை முதலே முகாம்களுக்கு பொதுமக்கள் வரத் தொடங்கியுள்ளனர்.
உரிமம் பெறாதவர்கள் வீடுகளுக்கு நாளை முதல் ஆய்வு செய்து ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்பட உள்ளது.
