Thursday, June 26, 2025

வெறும் ‘Luck’ மட்டும் தான் இருக்கு அவரை ‘வீட்டுக்கு’ அனுப்புங்க

இங்கிலாந்திற்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததால், இந்திய அணி தற்போது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் 2வது டெஸ்ட் போட்டியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

இந்தநிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் விமர்சகருமான சஞ்சய் மஞ்சுரேக்கர் ஷர்துல் தாகூரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர், ” ஷர்துல் தாகூர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் பெரிதாக தாக்கம் ஏற்படுத்தவில்லை. 16 ஓவர்களை வீசியும், 2 விக்கெட்களை தான் எடுத்தார்.

அதுவும் பேட்டர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி அவர் விக்கெட் எடுக்கவில்லை. பேட்ஸ்மேன்கள் பவுண்டரி அடிக்க ஆசைப்பட்டு தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். அந்த 2 பந்துகளையும் பிடிக்காமல் விட்டிருந்தால் நிச்சயம் அது பவுண்டரி தான். Luck மூலமாக மட்டுமே 2 விக்கெட்களையும் எடுத்திருக்கிறார்.

அத்துடன் சரியான லைன் அண்ட் லெந்த்திலும் ஷர்துலால் பந்துவீச முடியவில்லை. வேகம் குறைந்த ஷார்ட் பந்துகளை தான் அதிகம் வீசுகிறார். மேலும் பேட்டிங்கிலும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. எனவே அவரை நீக்கிவிட்டு வேறு ஒரு வீரரை அணியில் சேர்க்க வேண்டும். அவருக்கு மாற்றாக நிதிஷ் குமார் ரெட்டியை பிளேயிங் லெவனில் எடுப்பது தேவையில்லாத வேலை.

ஷர்துல் போல தான் அவரும் பந்து வீசுவார். என்னை கேட்டால் குல்தீப் யாதவை அணியில் எடுக்கலாம். ஒரு அணியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பது அவ்வளவு பெரிய பிரச்சினை இல்லை. தரமில்லாத வேகப்பந்து வீச்சாளருக்கு பதிலாக, சரியான லைன் அண்ட் லெந்தில் பந்துவீசும் குல்தீப்பை உள்ளே கொண்டு வந்து பேட்டர்களை அச்சுறுத்தலாம். என்னை கேட்டால் ஷர்துலுக்கு சரியான மாற்று வீரர் குல்தீப் தான்,” இவ்வாறு ஓபனாக பேசியிருக்கிறார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news