Wednesday, February 19, 2025

அதிமுக நிர்வாகியை துடைப்பத்தால் துவைத்து எடுத்த பெண்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே படப்பை பகுதியை சேர்ந்தவர் பொன்னம்பலம் (60). இவர் குன்றத்தூர் ஒன்றிய அதிமுகவில் எம்ஜிஆர் அணி இணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது வீட்டில், சுங்குவார்சத்திரம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலை செய்யும் 24 வயதுடைய 2 இளம் பெண்கள் குடியிருந்து வந்துள்ளனர்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு, பொன்னம்பலம் ஒரு இளம் பெண்ணிடம் தகாத முறையில் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அச்சமடைந்த இரண்டு பெண்களும், இவரது வாடகை வீட்டிலிருந்து , வெளியேறி கீழ்படப்பை பகுதியில் மற்றொரு வாடகை வீட்டிற்கு குடியேறி உள்ளனர்.

இதனிடையே, இளம் பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட, பொன்னம்பலம், குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து அண்மையில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இரண்டு பெண்களும், அவரது சக நண்பர்களும் பொன்னம்பலத்தை தொடப்பக்கட்டையால் சரமாரியாக தாக்கி மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார், பொன்னம்பலத்தை கைது செய்து, அவர் மீது பெண் வன்கொடுமை சட்டம், பெண்களிடம் ஆபாசமாக பேசுதல், பெண்களை தாக்கியது உள்பட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Latest news