நேற்று மாலை 6 மணியளவில் கள்ளக்குறிச்சியில் இருந்து கடலூருக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் சுமார் 22 பயணிகள் இருந்தனர். அந்த பேருந்து தியாகதுருகம் அருகே சென்ற போது திடீரென பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று ஓடியது.
உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டது. இதில் ஒருபுறமாக சாய்ந்து, சாலையில் தேய்த்தபடி சிறிது துாரம் ஓடி நின்றது. கழன்று ஓடிய சக்கரம், 100 அடி துாரத்தில் சாலையோர பள்ளத்தில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.