விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாப்பட்டி என்ற கிராமம் ரீல்ஸ் மூலம் திடீரென இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
மன அழுத்தமா?, விடுமுறையை கொண்டாட வேண்டுமா? கூமாப்பட்டிக்கு வாங்க, இந்த ஊரின் தண்ணீர் மூலிகை தண்ணீர் என பேசிய வீடியோ ஒரே நாளில் வைரலாக பரவியது. இதையடுத்து கூமாபட்டியில் ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், கூமாப்பட்டி பிளவக்கல் அணை பகுதியில் பொதுமக்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக அனுமதி இல்லை என்றும் சுற்றுலா பயணிகள் வருகை தந்து ஏமாற வேண்டாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.