Sunday, June 29, 2025

இந்தியாவில் தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை உயர்வு

இந்திய தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை மே மாதத்தில் 120.7 கோடியை எட்டியுள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்த 120.3 கோடியை விட அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சியில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன.

அதே சமயம், கடன் சுமையில் உள்ள வோடஃபோன் ஐடியா (வி.ஐ) மற்றும் பொதுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகியவை வாடிக்கையாளா்களை இழந்துள்ளது.

பிராட்பேண்ட் சேவை வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மே மாதத்தில் 97.48 கோடியை எட்டியுள்ளது. இதில் ரிலையன்ஸ் ஜியோ 49.44 கோடி பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுடன் முன்னிலை வகிக்கிறது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news