தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தற்போது முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு மட்டுமல்லாது, பிகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, குஜராத், ஒடிஷா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இதேபோன்ற திருத்த முயற்சிகள் நடைப்பெற்று வருகின்றன.
டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் இந்த படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில் , டிசம்பர் 11ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் 3 நாட்களுக்கு (டிசம்பர் 14) கால அவகாசம் நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதன்பின்னர் வருகிற 19-ந்தேதி தமிழகம், குஜராத் மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். சத்தீஷ்கார், அந்தமான் நிகோபர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் 18-ந்தேதி வரை படிவங்கள் பெறப்பட்டு, 23-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். உத்தர பிரதேசத்தில் 26-ந்தேதி வரை படிவங்கள் பெறப்பட்டு 31-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
