Tuesday, October 7, 2025

AI-யால் உலகளவில் காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து..!

2025ஆம் ஆண்டில் உலகளவில் 80,845 தொழில்நுட்ப ஊழியர்கள் பணியிட மாற்றம் சந்தித்துள்ளனர். இதனுடன், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் 2026 நிதியாண்டில் தனது ஊழியர்களில் 2% பணியிட நீக்கத்தை அறிவித்து, சுமார் 12,200 பேரை பாதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட், கூகுள், அமேசான் உள்ளிட்ட பெரிய IT நிறுவனங்களும் கடந்த சில மாதங்களில் பணியிட மாற்றங்களை மேற்கொண்டுள்ளன. குறிப்பாக, 2025ஆம் ஆண்டில் 25,000 தொழில்நுட்ப ஊழியர்கள் பல நிறுவனங்களில் இருந்து வேலை இழந்துள்ளனர்.

2025ஆம் ஆண்டில் 80,845 பேரும், 2024ஆம் ஆண்டில் 1,52,922 பேரும், 2023ஆம் ஆண்டில் 2,64,220 பேரும், 2022ஆம் ஆண்டில் 1,65,269 பேரும் வேலையை இழந்துள்ளனர். இந்த மாற்றங்களுக்கு முக்கிய காரணமாக செயற்கை நுண்ணறிவு (AI) முன்னேற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் ஆகியவை இருக்கின்றன.

அமேசான் CEO தெரிவித்துள்ளார், ஐ.ஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக, அடுத்த சில ஆண்டுகளில் பணியாளர் எண்ணிக்கை குறையலாம். கோல்ட்மேன் சாக்ஸ் CEO டேவிட் சாலமன் கூறியதுபோல், முன்பெல்லாம் பல பேரால் முடியும் வேலைகளை AI சாதனங்கள் மிக வேகமாக செய்து முடிக்கின்றன.

இந்த நிலைமை தொழில்நுட்ப துறையில் பெரிய மாற்றங்களையும், பணியாளர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நிறுவனங்களும் புதிய வகையான நிர்வாக திட்டங்களை முன்வைப்பதே அவசியமுள்ளதாக உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News