பாகிஸ்தானில் நடக்கும் கொடூரம்! ஜனநாயகத்தை விழுங்கும் ராணுவம் ! என்ன நடக்கிறது?

பாகிஸ்தான்… என்னும் பெயரைக் கேட்டாலே நினைவுக்கு வருவது ராணுவம் தான். அந்த ராணுவம் அந்நாட்டில் எந்தளவுக்கு அதிகாரம் செலுத்துகிறது தெரியுமா? வெறும் பாதுகாப்புக்கு மட்டும் அல்ல… அரசியல் முதல் பொருளாதாரம் வரை அதன் கைகள் ஊன்றப்பட்டிருக்கின்றன.

1958ம் ஆண்டு, பாகிஸ்தான் தனது ஜனநாயக பாதையை விட்டு ராணுவ ஆட்சி பாதைக்கு மாறியது. ஜெனரல் அயூப் கான், ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்து நேரடியாக ஆட்சியை பிடித்தார். இதனால்தான் அந்நாட்டு அரசியலில் ராணுவத்துக்கு நுழைவு வழி கிடைத்தது.

1977ல் மீண்டும் ஒருமுறை — பிரதமர் ஜில்பிகார் அலி பூட்டோவை அதிகாரத்திலிருந்து விலக்கி, ஜெனரல் சியா-உல்-ஹக் தலைமையிலான ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த இரண்டு முக்கிய சம்பவங்களும் பாகிஸ்தானில் ஜனநாயகத்தின் நிலையை சோதிக்க வைத்தன.

இனியும் நேரடி ஆட்சி இல்லாமலே, ராணுவம் மறைமுகமாக அரசியலை கட்டுப்படுத்தி வருகிறது. பிரதமர் இம்ரான் கான் கூட 2018ல் ராணுவ ஆதரவுடன் வந்தவர் என்பதும், 2022ல் அதே ராணுவத்தால் பதவிநீக்கம் செய்யப்பட்டதும் இதற்கு சாட்சி.

முக்கியமாக, பாகிஸ்தான் ராணுவம் அரசியல் மட்டுமல்ல, பொருளாதாரத்திலும் ஒரு பெரும் சக்தியாக மாறியுள்ளது. தொழில்கள், நிலங்கள், வணிக நிறுவனங்கள் என வியாபார துறையிலும் அதன் தாக்கம் பெரிது. இதை “Milbus” என அழைக்கின்றனர் — ராணுவத்தின் தனி வர்த்தக ஆட்சி.

இந்தியாவுடன் ஏற்பட்ட எல்லை மோதல்களில் கூட, அரசாங்கம் பேசுவதற்கும் முன்பே ராணுவம் நடவடிக்கை எடுக்கிறது. இதனால், அந்நாட்டில் யாரிடம் முடிவெட்டும் அதிகாரம் இருக்கிறது என்பது ஒரு பெரிய கேள்வி.

சுருக்கமாகச் சொன்னால், பாகிஸ்தானில் அரசியல் பார்ட்டிகள் தேர்தலில் வெல்லலாம், ஆனால் ஆட்சி யாருடையது என்பதை முடிவெடுக்கிறது ராணுவமே.

இது ஜனநாயகம் அல்ல… இது ஒரு வினோத கட்டமைப்பு!

Related News

Latest News