நகை வாங்குவது போல் நடித்து தங்க செயினை மாற்றி வைத்த  பெண்கள்

309

தஞ்சாவூர் தென்கீழ் அலங்கத்தில் உள்ள நகை கடையில், பர்தா அணிவந்த 2 பெண்கள் செயின் வேண்டும் என ஊழியர்களிடம்  கூறியுள்ளனர்.

அப்போது கடை ஊழியர் ஐந்து செயின்களை காட்டியுள்ளார். 

கடை ஊழியரை திசை திருப்பிய அந்த பெண்கள் ஒரு தங்க செயினை திருடிவிட்டு, அதற்கு பதிலாக கவரிங் செயினை மாற்றி வைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

பின்னர் கடை ஊழியர், செயினை சரிபார்க்கும் போது கவரிங் செயினை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைத்துள்ளார். 

இது குறித்து கடை உரிமையாளர் தஞ்சை மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் போலீசார் அந்த பெண்களை தேடி வருகின்றனர்.