தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்குடன் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், உங்களுக்கான தொழில் அல்லது வியாபாரம் தொடங்க அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரை கடனுதவி பெற முடியும். இது முழுக்க அரசின் உதவியுடன் நிகழும் திட்டம் ஆகும்.
இந்தத் திட்டத்தின் தனிச்சிறப்பு என்ன? என்றால்,
இந்தக் கடன் திட்டத்தின் கீழ், ஒரு நபருக்கு வழங்கப்படும் கடன் தொகை மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகிறது:
85%- ஐ தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி நிறுவனம் வழங்குகிறது.
10% – ஐ தமிழ்நாடு அரசு அளிக்கிறது.
மீதமுள்ள 5% – பயனாளியான நீங்களே செலுத்தவேண்டியது.
அதாவது, நீங்கள் பெறும் முழுக் கடன் தொகையில், உங்களின் பங்கு வெறும் ஐந்து சதவீதம் மட்டுமே!
வட்டியை எடுத்துக்கொண்டால்,
ரூ.1.25 லட்சம் வரை கடன் பெற்றால், வட்டி 7% ஆகும்.
ரூ.1.25 லட்சத்திற்கும் ரூ.5 லட்சத்திற்கும் இடைப்பட்ட தொகைக்கு வட்டி 8% ஆக இருக்கிறது
ரூ.5 லட்சத்திற்கும் ரூ.15 லட்சத்திற்கும் இடைப்பட்ட தொகைக்கு கூட சுமார் 8% வட்டி தான்.
இது ஒரு மிகச்சாதாரண வட்டி விகிதம். அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகத்தான் இருக்கிறது.
திருப்பிச் செலுத்தும் காலக்கெடு என்று பார்த்தால்,
குறைந்தது 3 ஆண்டுகள், அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை கடனைத் திருப்பிச் செலுத்த வாய்ப்பு உண்டு.
மெல்ல மெல்ல, மாதம் மாதம் கட்டிக்கொண்டு கடனைச் சுமுகமாக முடிக்கலாம்
இந்த வாய்ப்பைப் பெற நீங்கள் செய்ய வேண்டியவை சுலபம். நீங்கள் மாநிலம் அல்லது மத்திய அரசின் பட்டியலில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், அல்லது சீர்மரபினர் வகுப்பில் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் வருடத்திற்கு 3 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். வயது 18க்கு மேல், 60க்கு கீழ் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரே ஒருவருக்கு தான் இந்த உதவி கிடைக்கும்.
விண்ணப்பங்களை இலவசமாக சென்னையில் உள்ள TABCEDCO அலுவலகம், மாவட்ட அலுவலர்கள், கூட்டுறவுச் சங்க அலுவலகங்கள் மற்றும் மாவட்ட வங்கிகளில் வாங்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, தேவையான சான்றிதழ்களான — சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், திட்ட அறிக்கை, குடும்ப அட்டை, விலைப்புள்ளி, ஆதார், வங்கி ஆவணங்கள் — ஆகியவற்றுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
வங்கி உங்கள் தகவல்களை பரிசீலித்து, கடன் திருப்பிச் செலுத்தும் திறனை மதிப்பீடு செய்து, மாவட்ட நிலை குழுவிற்கு பரிந்துரை அனுப்பும். கடன் ஒப்பந்தம் கிடைத்தவுடன், இரண்டு மாத தவணை உத்தரவாத காலம் தரப்படும். அதன் பின்பு மாதந்தோறும் அல்லது காலாண்டு அடிப்படையில் தொகையை திருப்பிச் செலுத்தணும். தவணை தவறினால், வருடத்திற்கு 5% அபராத வட்டி வசூலிக்கப்படும். கடன் வழங்கப்பட்டவுடன் ஒரு கடன் அட்டை உங்களுக்கு வழங்கப்படும். இந்த அட்டையை ஒவ்வொரு தவணைக்கும் வங்கிக்கு எடுத்துச் சென்று பதிவு செய்ய வேண்டும்.
இது உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு நம்பகமான திட்டம். தொழில் ஆரம்பிக்க ஆசை இருக்கா? இந்த வாய்ப்பை பயன் பெறுங்க. அரசாங்கம் உங்களுக்காக துணையாக இருக்கு!