Tuesday, July 1, 2025

பனிக்கட்டியில் சிக்கிய நாயைக் காப்பாற்றிய வீரர்கள்

பனிக்கட்டிக்குள் சிக்கித் தத்தளித்த நாய் காப்பாற்றப்பட்ட சம்பவம்
வைரலாகி வருகிறது.

அனைவருக்கும் செல்லமான நண்பனான நாய் ஒன்று
பனி உறைந்த நீர்நிலைக்குள் தவறுதலாகச் சென்றுவிட்டது.
மேற்பரப்பு நன்கு உறைந்து பனிக்கட்டியாக மாறிவிட்ட நிலையில்,
அதிலிருந்து நீந்தி வெளியேற முடியாமல் தத்தளித்தபோது,
இரண்டுபேர் எந்திரப் படகில் சென்று காப்பாற்றியதைப் பலரும்
பாராட்டி வருகின்றனர்.

இதுதான் உண்மையான மனிதாபிமானம் என்று பதிவிட்டு
நாயைக் காப்பாற்றியவர்களைப் பாராட்டிவருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news