இஸ்ரேல் – ஈரான் இரண்டு நாடுகளும் தங்களின் முழு வலிமையை காட்டுவதால், 3வது உலகப்போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரானுக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா, வடகொரியா, சவூதி அரேபியா, ஏமன், பாகிஸ்தான் நாடுகள் களமிறங்கி உள்ளன.
இதேபோல இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் குதித்துள்ளன. இதில் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக நேரடி போரில் இறங்கி ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்கா வான்படை மற்றும் கடற்படை கொண்டு தாக்கியபோதும் கூட, அதனால் ஈரான் சிறிதும் அசரவில்லை. சில மணி நேரங்களிலேயே இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறி வைத்து சக்திவாய்ந்த, ‘கொரம்ஷார் 4’ ஏவுகணைகளை வீசியது.
சுமார் 40க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை அனுப்பி இஸ்ரேல் மீது, இடைவிடாமல் ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு கவசத்தால் பல ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டாலும், சில ஏவுகணைகள் இஸ்ரேலில் விழுந்து வெடித்தன. ஈரானின் ஏவுகணை தாக்குதலால், இஸ்ரேல் நாட்டின் சில நகரங்களில் சைரன்கள் இடைவிடாமல் ஒலித்தன.
அத்துடன் ஈரான் சார்பில் அமெரிக்காவுக்கு நேரடி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. அதில், ” அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, ஈரான் ஆயுதப் படைகளுக்கான சட்டப்பூர்வ இலக்குகளை விரிவுபடுத்தியுள்ளது. அமெரிக்கா தனது செயல்களுக்கு கடுமையான விளைவுகளை எதிர்பார்க்க வேண்டும். ட்ரம்ப், நீங்கள் ஒரு சூதாட்டக்காரர்.
நீங்கள் இந்தப் போரைத் தொடங்கலாம், ஆனால் நாங்கள்தான் அதை முடிவுக்குக் கொண்டுவருவோம், ” என்று தெரிவித்துள்ளது. இந்தநிலையில் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியும், அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சிலின் துணை தலைவருமான, டிமிட்ரி மெத்வதேவ் பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அமெரிக்கா தாக்குதல் குறித்து அவர், ” ஈரான் நாட்டில் அணு ஆயுதங்களுக்கான செறிவூட்டல் நிகழ்கிறது. வருங்காலத்தில் அணு ஆயுதங்களின் உற்பத்தி ஈரானில் தொடரும் என்றே, தற்போது நாம் கூற முடியும். அமெரிக்கா ராணுவம் பெரியளவில் சாதனை படைக்கத் தவறிவிட்டது. இந்த போரில் ஈரானுக்கு ஆதரவாக எண்ணற்ற நாடுகள், தங்களின் அணு ஆயுதங்களை நேரடியாக வழங்கத் தயாராக இருக்கின்றன,” என்றார்.
ஆனால் ஈரானுக்கு ஆதரவாக எந்தெந்த நாடுகள், அணு ஆயுதங்களை வழங்கும் என்ற தகவலை வெளியிட அவர் மறுத்து விட்டார். இந்த போரில் அமெரிக்காவிற்கு எதிராக சீனா, ரஷ்யா, வடகொரியா ஆகிய நாடுகள் களமிறங்கி இருக்கின்றன. குறிப்பாக சீனா, ரஷ்யா என இரண்டு வல்லரசு நாடுகளும் ஒன்றுசேர்ந்து அமெரிக்காவை எதிர்க்கின்றன.
இது டிரம்புக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. ஐ.நா சபையிலும் சீனா இதுகுறித்து விவாதித்து இருப்பதால், விரைவில் ஈரான் – இஸ்ரேல் போரில் ஐ.நா சபை தலையிடும் என்று தெரிகிறது.