Monday, September 8, 2025

பண்ருட்டி அருகே பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அவமானப்படுத்திய அதிர்ச்சி சம்பவம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் அருகே உள்ள நெல்லித்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராமர்(வயது 63). இவருடைய 2 சகோதரர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். விவசாயிகளான இவர்கள் 3 பேருக்கும் பொதுவான நிலம் உள்ளது. இந்த நிலத்தை பிரிப்பது தொடர்பாக 3 பேரின் குடும்பத்தினர் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து செல்வராணி என்ற பெண்ணை மரத்தில் கட்டிவைத்து அடித்து, உதைத்தனர். உருட்டு கட்டையாலும் தாக்கப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவத்தை செல்போனில் வீடியோ எடுத்தவரையும், அவர்கள் தாக்க முயன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News