Thursday, June 26, 2025

அமேசானில் மொபைல் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த ஷாக்

திருவள்ளூர் மாவட்ட நந்தவன மேட்டூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற நபர் அமேசான் செயலி மூலம் 35,000 ரூபாய் செலுத்தி மொபைல் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து பார்சலை பிரித்து பார்த்த போது அதில் மொபைலுக்கு பதிலாக சென்ட் பாட்டில் இருந்துள்ளது.

இது தொடர்பாக விக்னேஷ் அமேசான் செயலியில் புகார் செய்தார். பின்னர் அமேசான் அதிகாரி ஒருவர் தொடர்பு கொண்டு “எங்களால் எதுவும் செய்ய முடியாது” என கூறியுள்ளனர்.

இதையடுத்து அமேசான் நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும் என விக்னேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news