Saturday, September 27, 2025

‘பட்டியலின மாணவர்களை பொது பாதையில் செல்லக்கூடாது..’ வைரல் வீடியோ !!

நாம் தற்போது இருக்கும் காலகட்டத்தில் கல்வி, தொழில்நுட்பம் என அனைத்திலும் வளர்ந்து வருகிறோம். ஆனால் நாம் இன்றளவும் ஒரு விஷயத்தில் பின்தங்கியுள்ளதை அறியவேண்டியதாக இருக்கிறது. என்னதான் வளர்ந்தாலும் இந்த ஜாதி என்ற ஒன்றை தலையில் கிரீடமாக வைத்துக்கொண்டு பலர் சுற்றுவருகின்றனர். ஜாதி தொடர்பான அசம்பாவிதங்கள் அவ்வப்போது எங்கையாவது நிகழ்ந்த வண்ணமே உள்ளது.

அந்த வகையில், தஞ்சை ஒன்றியம், கொல்லாங்கரை கிராமத்தில் பள்ளி செல்லும், பட்டியலின மாணவர்களை பொது பாதையில் செல்லக்கூடாது என ஆதிக்க ஜாதியினர் தடுக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின், கலைச்செல்வி பாலசுப்பிரமணியன் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.அந்த வீடியோவில், ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பை மீறி பள்ளி மாணவர்கள் பொது பாதையை பயன்படுத்தினர். கலைச்செல்வி பாலசுப்பிரமணியன் வெளியிட்ட பேஸ்புக் பதிவில்,

“தஞ்சை ஒன்றியம், கொல்லாங்கரை கிராமத்தில், காலம்காலமாக பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த, பொது பாதையினை, சாதிய ஆதிக்கத்தின் பெயரில், பள்ளி செல்லும், பட்டியலின மாணவர்களை பொது பாதையில் செல்லக்கூடாது என தடுக்கும் அராஜகம்……. சிபிஐ(எம்),தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில், மிக வன்மையாக கண்டிக்கிறோம்! மாவட்ட நிர்வாகத்திடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நிரந்தர தீர்வு எடுக்காமல் அலட்சியம் காட்டியது மென்மேலும் வன்முறையை அதிகரிக்கச் செய்கிறது!” என்று பதிவிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News