Friday, August 22, 2025
HTML tutorial

மாதம் ரூ.15 ஆயிரம் சம்பாதிப்பவருக்கு ரூ.34 கோடி வரி : நோட்டிஸ் அனுப்பிய ஐ.டி

உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் தூய்மை பணியாளரான கரன் குமார். மாதம் ரூ.15 ஆயிரம் சம்பாதிக்கும் இவருக்கு ரூ.34 கோடி வரி செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

இதனால் அதிர்ந்து போன கரண் குமார் வருமான வரித் துறையை அணுகினார், அங்கு அதிகாரிகள் அவரை முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யுமாறு அறிவுறுத்தினர். அவர்களின் ஆலோசனையைத் தொடர்ந்து, கரண் காவல்துறையை அணுகி புகார் அளித்தார்.

கடந்த பத்து நாட்களில் குறைந்த வருமானம் உள்ள நபர்களுக்கு வரித் துறை நோட்டீஸ் அனுப்பப்பட்ட மூன்றாவது சம்பவம் இதுவாகும். முன்னதாக, ஒரு ஜூஸ் விற்பனையாளருக்கு ரூ.7.54 கோடிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது, அதே நேரத்தில் ஒரு பூட்டு தொழிலாளிக்கு ரூ.11.11 கோடிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News