வாடகைத் தாய் விவகாரம் பற்றி வெளிப்படையாக பேசிய சமந்தா!

178
Advertisement

நயன் விக்கி தம்பதியர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதில் இருந்து, வாடகைத் தாய் பற்றிய கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சமந்தா அண்மையில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் வாடகை தாய் பற்றி அவரது கருத்து என்னவென்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பல விஷயங்களில் தனக்கு தனிப்பட்ட கருத்து இல்லையென கூறிய சமந்தா, அனைவருக்கும் மகிழ்ச்சியாக வாழ உரிமை உண்டு அதற்காக அவர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யலாம் என்றார்.

தற்போது hot topic ஆக இருக்கும் வாடகை தாய் விவகாரம், சமந்தா நடித்துள்ள யசோதா திரைப்பட கதையாகவும் அமைந்திருப்பது பற்றி கேட்கப்பட்டதற்கு, இந்த படம் முன்னதாகவே எடுக்கப்பட்டு விட்டதாகவும் இப்போதைய சூழல் free marketing அளிப்பதாகவும் நகைச்சுவையாக பகிர்ந்து கொண்டார் சமந்தா.