Thursday, June 12, 2025

ஓங்கி அடிக்கும் ரஷ்யா! தவிடுபொடியாகும் உக்ரைன்! தொடங்கியது அதிபயங்கர வான்வழி தாக்குதல்!

ரஷ்யா உக்ரைன் மீது அதிபயங்கரமான வான்வழித் தாக்குதல்களில் ஒன்றைத் தற்போது தொடங்கியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலான போரில் கீவ் (KIV) மீது ரஷ்யா தனது சக்திவாய்ந்த வான்வழித் தாக்குதல்களில் ஒன்றை நடத்தியிருக்கிறது. மேலும் இதில் தெற்கு நகரமான ஒடெசாவில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனையின் ஒரு பகுதி தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. இதில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

திங்களன்று உக்ரைனில் நடந்த ரஷ்யாவின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் இரவு நேரத்திலும் தொடர்ந்தது. மேலும் இது ரஷ்யா மீதான உக்ரேனியப் படைகளின் தாக்குதல்களுக்கு பதிலடி என்று கூறப்படுகிறது. மாஸ்கோ கூறும் தீவிரப்படுத்தப்பட்ட குண்டுவீச்சின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.

ரஷ்ய தாக்குதலில் கீவ்வின் வரலாற்று மையத்தில் அமைந்துள்ள யுனெஸ்கோ சேதப்படுத்தப்பட்டது. இதை பற்றி ‘எதிரிகளால் எங்கள் அடையாளத்தின் மையம் மீண்டும் தாக்கப்பட்டுள்ளது’ என்று உக்ரைன் அதிகாரி ஒருவர் பேஸ்புக்கில் குறிப்பிட்டிருக்கிறார்.

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கிவ்வில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதை தொடர்ந்து தீப்பிழம்புகளும் வானத்தை எட்டின. இதனால் நகரம் முழுவதும் அடர்ந்த புகை கிளம்பியதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். கீவ் மீதான தாக்குதலில் ஒருவர் இறந்ததாக நகர அதிகாரிகள் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளதாக கெஸெட்டா எக்ஸ்பிரஸின் செய்தி கூறுகிறது.

315 டிரோன்கள் மற்றும் 7 ஏவுகணைகளை பயன்படுத்தி நடத்தப்பட்டிருக்கும் இந்த கடுமையான தாக்குதலுக்கு வலுவான பதிலடி கொடுக்கும்படி உக்ரைன் அதிபர் Zelenskyy அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளார். அப்படி எதிர் தாக்குதல் நடத்தப்படும்பட்சத்தில் அது மூன்றாம் உலக போராக வெடிக்குமா என்ற அச்சம் தற்போது சர்வதேச அரசியலில் நிலவுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news