திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி, நெய்க்காரப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ராஜீவ் காந்தி. இவர் பாஜக இளைஞரணி ஒன்றிய தலைவராக பொறுப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் ராஜிவ் காந்தி கையில் கத்தி வைத்துக்கொன்டு இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் காவல் துறையினர் ராஜிவ் காந்தியை கைது செய்தனர்.