Saturday, May 31, 2025

‘சீட்டுக்கட்டு’ போல சரிந்த பஞ்சாப் பாண்டிங் – ஷ்ரேயாஸ் கடும் மோதல்?

IPL பாயிண்ட் டேபிளில் முதல் 2 இடங்களில் இருக்கும் பஞ்சாப் – பெங்களூரு அணிகள், மே 29ம் தேதி சண்டிகரில் மோதின. இதில் வென்றால் ‘ராஜா பஹவூத்’ போல நேரடியாக, இறுதிப்போட்டிக்கு சென்றுவிடலாம் என்பதால், இரு அணிகளும் கடைசிவரை போராடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

ஆனால் ஆரம்பம் முதலே போட்டி பெங்களூருக்கு சாதகமாகி விட்டது. பஞ்சாப்பை பஞ்சு போல ஊதித்தள்ளிய, பெங்களூரு 9 ஆண்டுகள் கழித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்தநிலையில் போட்டிக்கு நடுவே பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ்க்கும், தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்குக்கும் முட்டிக்கொண்டு விட்டது.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. நல்ல பார்மில் இருந்த பஞ்சாப் வீரர்கள், பெங்களூரு பவுலர்கள் விரித்த வலையில் வேகமாக விக்கெட்களை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால் 14.1 ஓவர்களிலேயே பஞ்சாப் படுத்து விட்டது.

இதுதொடர்பாக பாண்டிங் – ஷ்ரேயாஸ் இருவருக்கும், கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. என்றாலும் பஞ்சாப் அணிக்கு இன்னுமொரு வாய்ப்பு மீதமிருப்பதால், நிச்சயம் அந்த அணி Comeback கொடுக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

ஜூன் 3ம் தேதி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில், நடைபெறவுள்ள IPL இறுதிப்போட்டியில் RCBயுடன் மோதப்போகும் அணி எது?, என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news