Thursday, January 15, 2026

மும்பை – பஞ்சாப் லீக் போட்டிக்கான மைதானம் மாற்றம்

பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது. தாக்குதலை தொடர்ந்து, எல்லையில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தரம்சாலாவில் வரும் மே 11ம் தேதி நடைபெற இருந்த மும்பை – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தரம்சாலாவுக்கு பதிலாக மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் போட்டியை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Related News

Latest News