பிரதமர் மோடி, ஜூன் 15 (நாளை) முதல் 19 வரை சைப்பிரஸ், கனடா, மற்றும் குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு 5 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த பயணத்தால் இந்தியாவின் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. குரோஷியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார்.