சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பல்லாவரம்
துர்கா நகர், டிஎன்எச்பி காலனி, செல்லியம்மன் கோவில் தெரு மற்றும் சுற்றுப்புற பகுதிகள். திருமுல்லைவாயல்: சிடிஎச் சாலை, சோளம்பேடு மெயின் ரோடு, நேதாஜி நகர், கலைஞர் நகர் ஆகிய பகுதிகளிலும் மின் தடை செய்யப்படயுள்ளது.
மயிலாப்பூர்
ஆர்.கே. சாலை, டி.டி.கே. சாலை மற்றும் அருகிலுள்ள தெருக்களான பி.எஸ். சிவசுவாமி சாலை, வீரபெருமாள் கோவில் தெரு, லாயிட்ஸ் லேன். பூந்தமல்லி: பை-பாஸ் சாலை மற்றும் பரிவாக்கம் சாலை
ஆவடி
பாண்டேஸ்வரம் கலைஞர் நகர், கோவில்பதாகை மெயின் ரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் ஆகிய இடங்களில் மின் தடை செய்யப்படயுள்ளது என்று இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.