தூத்துக்குடியில் தமிழக அரசுக்கு சொந்தமான அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 5 யூனிட்டுகள் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் அனுப்பப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக முதலாவது மற்றும் 2-வது யூனிட்டுகள் தீ விபத்தில் எரிந்து முற்றிலும் சேதமானது. இதனால் 3-வது யூனிட்டில் மட்டும் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. ஆனால் 3-வது யூனிட்டிலும் நேற்று இரவு பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மொத்தம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த அனல் மின் நிலையத்தில் மின்சார உற்பத்தியை தொடங்காவிட்டால் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உருவாகும் என கூறப்படுகிறது.
