அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறை மீது போலீசார் வழக்குப்பதிவு

அமைச்சர் ஐ.பெரியசாமியின் சென்னை மற்றும் திண்டுக்கல்லில் உள்ள வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஐ.பெரியசாமியின் வீடு, சென்னை சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் எம்.எல்.ஏ செந்தில்குமார் விடுதி அறைக்குள் அமலாக்கத்துறையினர் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறையினர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Related News

Latest News