Wednesday, December 17, 2025

டெல்லி மருத்துவமனையில் ஷிபு சோரனுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 81. சிறுநீரக பாதிப்பு காரணமாக கடந்த சில வருடங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு உடல்நிலை மேலும் மோசமானதை அடுத்து, டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ஷிபு சோரன் மறைவையொட்டி ஜார்க்கண்ட்டில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் மாநில அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்ற பிரதமர் மோடி, ஷிபு சோரனுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவரது மகன் ஹேமந்த் சோரனுக்கு ஆறுதல் கூறினார்.

Related News

Latest News