Friday, September 26, 2025

பிரதமர் மோடி BSNL ன் 4G நெட்வொர்க்கை தொடங்கி வைக்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி நாளை (செப்டம்பர் 27) ஓடிசாவின் ஜார்சுகுடா நகரில் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவத்தின் உள்நாட்டு 4ஜி நெட்வொர்க்கைத் திறந்து வைப்பார். மேலும், நாடு முழுவதும் ₹37,000 கோடி செலவில் கட்டப்பட்ட 97,500க்கும் மேற்பட்ட மொபைல் 4ஜி கோபுரங்களை இயக்குவார் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய அமைப்புகள் 4,723க்கும் மேற்பட்ட கோபுரங்களுக்கு நிதி அளிக்கின்றன. பிஎஸ்என்எல்லின் உள்நாட்டு 4ஜி ஸ்டேக்கால் மேலும் 14,180 கோபுரங்களுக்கு நிதியளிக்கப்பட்டு, 26,700 தொலைதூர மற்றும் எல்லை கிராமங்களை உள்ளடக்கி, சுமாராக இரண்டு மில்லியன் புதிய பயனர்களை அடையும் என ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

“தொலைத்தொடர்புத் துறைக்கு இது ஒரு புதிய சகாப்தம், டென்மார்க், ஸ்வீடன், தென் கொரியா, சீனா உள்ளிட்ட தொலைத்தொடர்பு உபகரணங்களை உற்பத்தி செய்து உற்பத்தி செய்யும் முன்னணி நாடுகளின் களத்தில் இந்தியா ஐந்தாவது நாடாக உள்ளது என அவர் தெரிவித்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News