அமெரிக்காவிற்குள் நுழைய12 நாட்டு மக்களுக்கு தடை விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். மேலும் 7 நாட்டு மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் மக்கள் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தடை விதிக்கப்பட்ட நாடுகள்
ஆப்கானிஸ்தான்
மியான்மர்
சாட்
காங்கோ குடியரசு
எக்குவடோரியல் கினியா
எரித்திரியா
ஹைட்டி
ஈரான்
லிபியா
சோமாலியா
சூடான்
யேமன்
மேலும், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.