Monday, June 9, 2025

தீ விபத்தில், பவன் கல்யாணின் மகனுக்கு தீக்காயம்

சிங்கப்பூரில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில், பவன் கல்யாணின் மகன் தீக்காயமடைந்தார். இதனால் பவன் கல்யாண் அவசர அவசரமாக சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுள்ளார்.

ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் 8 வயது மகன் மார்க் சங்கர், சிங்கப்பூரில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். அப்பள்ளியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், பவன் கல்யாணின் மகன் சிக்கி, கை, கால்காளில் லேசான தீக்காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக மருத்துவமனை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இன்று தான் பங்கேற்க இருக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்த பவன் கல்யாண், அவசர அவசரமாக சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news