“பாலிவுட்டில் இருந்து பணம் மட்டும் வேணும், ஹிந்தி வேணாமா? இது என்ன லாஜிக்” – பவன் கல்யாண் கேள்வி

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், ஜன சேனா கட்சியின் 12வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது மும்மொழி கொள்கையில் தமிழ்நாட்டின் நிலைபாடு குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக அரசியல்வாதிகள் ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. ஆனால் அவர்கள் தமிழ் திரைப்படங்களை இந்தியில் டப் செய்து வெளியிட அனுமதிக்கிறார்கள். பாலிவுட்டில் இருந்து கிடைக்கும் பணம் மட்டும் தேவை. ஆனால் அவர்களுக்கு இந்தி தேவையில்லையா? இது என்ன லாஜிக் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Related News

Latest News