பாகிஸ்தான் எல்லைக்குள் பாய்ந்த இந்திய ஏவுகணை… இந்தியப் பாதுகாப்புத்துறை விளக்கம்

240
Advertisement

இந்தியாவின் ஏவுகணை ஒன்று பாகிஸ்தான் எல்லைக்குள் பாய்ந்ததாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தங்களது எல்லைக்குள் விழுந்த ஏவுகணையின் பாகங்களைப் சேகரித்து பாகிஸ்தான் சோதனை செய்த பின்னர், முன்னறிவிப்பு ஏதுமின்றி நடத்தப்பட்ட ஏவுகணை சோதனைக்கு இந்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனப் பாகிஸ்தான் கேட்டுக்கொண்டது.

இந்நிகழ்வு குறித்து இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சகம் , வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மார்ச் 9-ம் தேதி வழக்கமாக நடைபெறும் பராமரிப்பு பணியின் போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாகத் தவறுதலாகப் பாகிஸ்தான் எல்லைக்குள் தரையிறங்கிவிட்டது என்றும், இது பற்றி விசாரிக்க உயர்மட்டவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும்,இந்த எதிர்பாராத விபத்தில் எந்தவொரு உயிர்ச் சேதமும் ஏற்படாதது நிம்மதியை தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.