Tuesday, July 1, 2025

பூட்டை உடைத்து அதிமுக எம்.எல்.ஏ அலுவலகம் திறப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ தமிழ்செல்வம் இன்று எம்ஜிஆரின் 108 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அலுவலகத்திற்கு செல்லும் பொழுது அலுவலக சாவி தொலைந்தால் வெளியே காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

நீண்ட நேரம் ஆகியும் சாவி கிடைக்காத காரணத்தினால் அதிமுகவினர் பூட்டை உடைத்து எம்.எல்.ஏ வை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

தை மாதத்தில் பொதுவாக நன்மை பிறக்கும் என்ற ஒரு ஐதீகத்தில் தை மாதத்தில் எல்.எல்.ஏ அலுவலக பூட்டு உடைத்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news